| முகப்பு | தொடக்கம் | 
| 
வன் பரணர் | 
| 
 148 | 
| 
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின் | |
| 
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி, | |
| 
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து, | |
| 
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப; | |
| 
5 | 
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி, | 
| 
செய்யா கூறிக் கிளத்தல் | |
| 
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே. | |
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
 | |
| 
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.
 | 
| 
 149 | 
| 
நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென் | |
| 
மாலை மருதம் பண்ணி, காலை | |
| 
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி, | |
| 
வரவு எமர் மறந்தனர் அது நீ | |
| 
5 | 
புரவுக் கடன் பூண்ட வண்மையானே. | 
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 150 | 
| 
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன | |
| 
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி, | |
| 
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் | |
| 
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, | |
| 
5 | 
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால், | 
| 
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி, | |
| 
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், | |
| 
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ, | |
| 
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை, | |
| 
10 | 
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே | 
| 
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத் | |
| 
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின் | |
| 
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின், | |
| 
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, | |
| 
15 | 
நல் மரன் நளிய நறுந் தண் சாரல், | 
| 
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி, | |
| 
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே, | |
| 
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம் | |
| 
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என, | |
| 
20 | 
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் | 
| 
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; | |
| 
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்; | |
| 
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்; | |
| 
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே | |
| 
25 | 
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி | 
| 
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின், | |
| 
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர், | |
| 
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 152 | 
| 
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி | |
| 
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ, | |
| 
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக் | |
| 
கேழற் பன்றி வீழ, அயலது | |
| 
5 | 
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும், | 
| 
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன், | |
| 
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் | |
| 
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன் | |
| 
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்; | |
| 
10 | 
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின், | 
| 
சாரல் அருவிப் பய மலைக் கிழவன், | |
| 
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ? | |
| 
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும் | |
| 
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்; | |
| 
15 | 
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்; | 
| 
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்; | |
| 
பதலை ஒரு கண் பையென இயக்குமின்; | |
| 
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று, | |
| 
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி, | |
| 
20 | 
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி, | 
| 
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது | |
| 
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம் | |
| 
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர் | |
| 
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என, | |
| 
25 | 
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில் | 
| 
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு, | |
| 
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி, | |
| 
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன், | |
| 
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என, | |
| 
30 | 
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை | 
| 
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன், | |
| 
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே! | |
| 
திணை அது; துறை பரிசில் விடை.
 | |
| 
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.
 | 
| 
 153 | 
| 
மழை அணி குன்றத்துக் கிழவன், நாளும், | |
| 
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும், | |
| 
சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை, | |
| 
அடு போர் ஆனா, ஆதன் ஓரி | |
| 
5 | 
மாரி வண் கொடை காணிய, நன்றும் | 
| 
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே; | |
| 
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை | |
| 
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும், | |
| 
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி, | |
| 
10 | 
பசியாராகல் மாறுகொல் விசி பிணிக் | 
| 
கூடு கொள் இன் இயம் கறங்க, | |
| 
ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே? | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 255 | 
| 
'ஐயோ!' எனின், யான் புலி அஞ்சுவலே; | |
| 
அணைத்தனன் கொளினே, அகல் மார்பு எடுக்கவல்லேன்; | |
| 
என் போல் பெரு விதிர்ப்புறுக, நின்னை | |
| 
இன்னாது உற்ற அறன் இல் கூற்றே! | |
| 
5 | 
நிரை வளை முன் கை பற்றி | 
| 
வரை நிழல் சேர்கம் நடத்திசின் சிறிதே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
....................வன்பரணர் பாடியது.
 |