| முகப்பு | தொடக்கம் | 
| 
வான்மீகியார் | 
| 
 358 | 
| 
பருதி சூழ்ந்த இப் பயம் கெழு மா நிலம் | |
| 
ஒரு பகல் எழுவர் எய்தியற்றே; | |
| 
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு | |
| 
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின், | |
| 
5 | 
கைவிட்டனரே காதலர்; அதனால் | 
| 
விட்டோரை விடாஅள், திருவே; | |
| 
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே. | |
| 
திணை அது; துறை மனையறம், துறவறம்.
 | |
| 
வான்மீகியார் பாடியது.
 |