| முகப்பு | தொடக்கம் | 
| 
விரிச்சியூர் நன்னாகனார் | 
| 
 292 | 
| 
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் | |
| 
யாம் தனக்கு உறுமுறை வளாவ, விலக்கி, | |
| 
'வாய் வாள் பற்றி நின்றனன்' என்று, | |
| 
சினவல் ஓம்புமின், சிறு புல்லாளர்! | |
| 
5 | 
ஈண்டே போல வேண்டுவன்ஆயின், | 
| 
என் முறை வருக என்னான், கம்மென | |
| 
எழு தரு பெரும் படை விலக்கி, | |
| 
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே. | |
| 
திணை வஞ்சி; துறை பெருஞ்சோற்றுநிலை.
 | |
| 
விரிச்சியூர் நன்னாகனார் பாடியது.
 |