| முகப்பு | தொடக்கம் | 
| 
விரியூர் நக்கனார் | 
| 
 332 | 
| 
பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர் | |
| 
மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே; | |
| 
இரும் புறம் நீறும் ஆடி, கலந்து இடைக் | |
| 
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்; | |
| 
5 | 
மங்கல மகளிரொடு மாலை சூட்டி, | 
| 
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப, | |
| 
தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து, | |
| 
மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு, | |
| 
இருங் கடல் தானை வேந்தர் | |
| 
10 | 
பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
விரியூர் நக்கனார் பாடியது.
 |