| முகப்பு | தொடக்கம் | 
| 
வீரை வெளியனார் | 
| 
 320 | 
| 
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி, | |
| 
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல், | |
| 
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென, | |
| 
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர் | |
| 
5 | 
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட, | 
| 
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள் | |
| 
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே | |
| 
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும், | |
| 
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து, | |
| 
10 | 
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி | 
| 
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென, | |
| 
ஆர நெருப்பின், ஆரல் நாற, | |
| 
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் | |
| 
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி, | |
| 
15 | 
தங்கினை சென்மோ, பாண! தங்காது, | 
| 
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் | |
| 
அருகாது ஈயும் வண்மை | |
| 
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வீரை வெளியனார் பாடியது.
 |