| முகப்பு | தொடக்கம் | 
| 
வெள்ளெருக்கிலையார் | 
| 
 233 | 
| 
பொய்யாகியரோ! பொய்யாகியரோ! | |
| 
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் | |
| 
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய | |
| 
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ! | |
| 
5 | 
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண், | 
| 
போர் அடு தானை, எவ்வி மார்பின் | |
| 
எஃகுறு விழுப்புண் பல' என | |
| 
வைகுறு விடியல், இயம்பிய குரலே. | |
| 
திணயும் துறையும் அவை.
 | |
| 
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.
 | 
| 
 234 | 
| 
நோகோ யானே? தேய்கமா காலை! | |
| 
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி, | |
| 
தன் அமர் காதலி புல் மேல் வைத்த | |
| 
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல் | |
| 
5 | 
உலகு புகத் திறந்த வாயில் | 
| 
பலரோடு உண்டல் மரீஇயோனே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 |