| முகப்பு | தொடக்கம் | 
| 
வெள்ளைக்குடி நாகனார் | 
| 
 35 | 
| 
நளி இரு முந்நீர் ஏணி ஆக, | |
| 
வளி இடை வழங்கா வானம் சூடிய | |
| 
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர், | |
| 
முரசு முழங்கு தானை மூவருள்ளும், | |
| 
5 | 
அரசு எனப்படுவது நினதே, பெரும! | 
| 
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், | |
| 
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும், | |
| 
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட, | |
| 
தோடு கொள் வேலின் தோற்றம் போல, | |
| 
10 | 
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் | 
| 
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க | |
| 
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! | |
| 
நினவ கூறுவல்; எனவ கேண்மதி! | |
| 
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து | |
| 
15 | 
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு | 
| 
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே; | |
| 
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ | |
| 
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு, | |
| 
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை | |
| 
20 | 
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய | 
| 
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ! | |
| 
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப, | |
| 
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, | |
| 
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து, | |
| 
25 | 
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை | 
| 
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; | |
| 
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், | |
| 
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், | |
| 
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்; | |
| 
30 | 
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும் | 
| 
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது, | |
| 
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி, | |
| 
குடி புறந்தருகுவை ஆயின், நின் | |
| 
அடி புறந்தருகுவர், அடங்காதோரே. | |
| 
திணை அது; துறை செவியறிவுறூஉ.
 | |
| 
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.
 |