| முகப்பு | தொடக்கம் | 
| 
வெள்ளைமாளர் | 
| 
 296 | 
| 
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும், | |
| 
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும், | |
| 
எல்லா மனையும் கல்லென்றவ்வே; | |
| 
வேந்து உடன்று எறிவான்கொல்லோ | |
| 
5 | 
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே? | 
| 
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
 | |
| 
வெள்ளைமாளர் பாடியது.
 |