| முகப்பு | தொடக்கம் | 
| 
வெறி பாடிய காமக்கண்ணியார் | 
| 
 271 | 
| 
நீர் அறவு அறியா நிலமுதல் கலந்த | |
| 
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை, | |
| 
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல், | |
| 
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே, | |
| 
5 | 
வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து, | 
| 
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து, | |
| 
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் | |
| 
மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே! | |
| 
திணை நொச்சி; துறை செருவிடை வீழ்தல்.
 | |
| 
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
 | 
| 
 302 | 
| 
வெடி வேய் கொள்வது போல ஓடி, | |
| 
தாவுபு உகளும், மாவே; பூவே, | |
| 
விளங்குஇழை மகளிர் கூந்தல் கொண்ட; | |
| 
நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய | |
| 
5 | 
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க் | 
| 
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய, | |
| 
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்; | |
| 
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி, | |
| 
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின், | |
| 
10 | 
விண் இவர் விசும்பின் மீனும், | 
| 
தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே. | |
| 
திணை அது; துறை குதிரை மறம்.
 | |
| 
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.
 |