| முகப்பு | தொடக்கம் | 
| 
அண்டிரன் | 
| 
 129 | 
| 
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் | |
| 
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, | |
| 
வேங்கை முன்றில் குரவை அயரும், | |
| 
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன் | |
| 
5 | 
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் | 
| 
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று, | |
| 
வானம் மீன் பல பூப்பின், ஆனாது | |
| 
ஒரு வழிக் கரு வழி இன்றிப் | |
| 
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 131 | 
| 
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன், | |
| 
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன், | |
| 
குன்றம் பாடினகொல்லோ | |
| 
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 240 | 
| 
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், | |
| 
வாடா யாணர் நாடும் ஊரும், | |
| 
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் | |
| 
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, | |
| 
5 | 
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, | 
| 
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, | |
| 
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, | |
| 
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் | |
| 
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, | |
| 
10 | 
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; | 
| 
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, | |
| 
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் | |
| 
வாடிய பசியராகி, பிறர் | |
| 
நாடு படு செலவினர் ஆயினர், இனியே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
 | 
| 
 241 | 
| 
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், | |
| 
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி | |
| 
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், | |
| 
போர்ப்புறு முரசம் கறங்க, | |
| 
5 | 
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
 | 
| 
 374 | 
| 
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் | |
| 
புல்வாய் இரலை நெற்றி அன்ன, | |
| 
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் | |
| 
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், | |
| 
5 | 
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என் | 
| 
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, | |
| 
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர, | |
| 
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட, | |
| 
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் | |
| 
10 | 
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா | 
| 
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை, | |
| 
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம், | |
| 
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும், | |
| 
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ, | |
| 
15 | 
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன், | 
| 
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல, | |
| 
வண்மையும் உடையையோ? ஞாயிறு! | |
| 
கொன் விளங்குதியால் விசும்பினானே! | |
| 
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
 | |
| 
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
 |