| முகப்பு | தொடக்கம் | 
| 
அதியமான் நெடுமான் அஞ்சி | 
| 
 87 | 
| 
களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, | |
| 
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல் | |
| 
எண் தேர் செய்யும் தச்சன் | |
| 
திங்கள் வலித்த கால் அன்னோனே. | |
| 
திணை தும்பை; துறை தானை மறம்.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 | 
| 
 88 | 
| 
யாவிர் ஆயினும், 'கூழை தார் கொண்டு | |
| 
யாம் பொருதும்' என்றல் ஓம்புமின் ஓங்கு திறல் | |
| 
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன், | |
| 
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் | |
| 
5 | 
விழவு மேம்பட்ட நல் போர் | 
| 
முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 89 | 
| 
'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், | |
| 
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி! | |
| 
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என, | |
| 
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! | |
| 
5 | 
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன | 
| 
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று, | |
| 
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை | |
| 
வளி பொரு தெண் கண் கேட்பின், | |
| 
'அது போர்' என்னும் என்னையும் உளனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 90 | 
| 
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் | |
| 
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல், | |
| 
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? | |
| 
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய | |
| 
5 | 
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? | 
| 
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய | |
| 
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, | |
| 
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும் | |
| 
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? | |
| 
10 | 
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை | 
| 
வழு இல் வன் கை, மழவர் பெரும! | |
| 
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் | |
| 
பொருநரும் உளரோ, நீ களம் புகினே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 91 | 
| 
வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் | |
| 
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை, | |
| 
ஆர் கலி நறவின், அதியர் கோமான்! | |
| 
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி! | |
| 
5 | 
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி | 
| 
நீலமணி மிடற்று ஒருவன் போல | |
| 
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப் | |
| 
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட | |
| 
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது, | |
| 
10 | 
ஆதல் நின் அகத்து அடக்கி, | 
| 
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே! | |
| 
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
 | |
| 
அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.
 | 
| 
 92 | 
| 
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; | |
| 
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு | |
| 
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை; | |
| 
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் | |
| 
5 | 
கடி மதில் அரண் பல கடந்த | 
| 
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 93 | 
| 
திண் பிணி முரசம் இழுமென முழங்கச் | |
| 
சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர் | |
| 
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, | |
| 
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் | |
| 
5 | 
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ, | 
| 
காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார், | |
| 
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் | |
| 
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, | |
| 
'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த | |
| 
10 | 
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என | 
| 
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ | |
| 
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து | |
| 
அண்ணல் யானை அடு களத்து ஒழிய, | |
| 
அருஞ் சமம் ததைய நூறி, நீ, | |
| 
15 | 
பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே. | 
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.
 | 
| 
 94 | 
| 
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின், | |
| 
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல | |
| 
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன் | |
| 
துன் அருங் கடாஅம் போல | |
| 
5 | 
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 95 | 
| 
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி, | |
| 
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து, | |
| 
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே, | |
| 
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து, | |
| 
5 | 
கொல் துறைக் குற்றில மாதோ என்றும் | 
| 
உண்டாயின் பதம் கொடுத்து, | |
| 
இல்லாயின் உடன் உண்ணும், | |
| 
இல்லோர் ஒக்கல் தலைவன், | |
| 
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே. | |
| 
திணை பாடாண் திணை; துறை வாள் மங்கலம்.
 | |
| 
அவன் தூதுவிட, தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.
 | 
| 
 97 | 
| 
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், | |
| 
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், | |
| 
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; | |
| 
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் | |
| 
5 | 
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், | 
| 
சுரை தழீஇய இருங் காழொடு | |
| 
மடை கலங்கி நிலை திரிந்தனவே; | |
| 
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் | |
| 
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், | |
| 
10 | 
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; | 
| 
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் | |
| 
பொலம் பைந் தார் கெடப் பரிதலின், | |
| 
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே; | |
| 
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் | |
| 
15 | 
பொலந் தும்பைக் கழல் பாண்டில் | 
| 
கணை பொருத துளைத் தோலன்னே. | |
| 
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள், | |
| 
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் | |
| 
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு | |
| 
20 | 
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின், | 
| 
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச் | |
| 
சொல்லவும் தேறீராயின், மெல் இயல், | |
| 
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி, | |
| 
குறுந் தொடி மகளிர் தோள் விடல் | |
| 
25 | 
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
 | 
| 
 98 | 
| 
முனைத் தெவ்வர் முரண் அவியப் | |
| 
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் | |
| 
இனக் களிறு செலக் கண்டவர் | |
| 
மதில் கதவம் எழுச் செல்லவும், | |
| 
5 | 
பிணன் அழுங்கக் களன் உழக்கிச் | 
| 
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் | |
| 
இன நல் மாச் செலக் கண்டவர் | |
| 
கவை முள்ளின் புழை அடைப்பவும், | |
| 
மார்புறச் சேர்ந்து ஒல்காத் | |
| 
10 | 
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் | 
| 
தோல் கழியொடு பிடி செறிப்பவும், | |
| 
வாள் வாய்த்த வடுப் பரந்த நின் | |
| 
மற மைந்தர் மைந்து கண்டவர் | |
| 
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், | |
| 
15 | 
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, | 
| 
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் | |
| 
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார் | |
| 
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து | |
| 
இறங்குகதிர் அலம்வரு கழனி, | |
| 
20 | 
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே! | 
| 
திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 99 | 
| 
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், | |
| 
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், | |
| 
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய | |
| 
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல, | |
| 
5 | 
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல், | 
| 
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல், | |
| 
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் | |
| 
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு, | |
| 
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச் | |
| 
10 | 
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய | 
| 
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் | |
| 
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ | |
| 
முரண் மிகு கோவலூர் நூறி, நின் | |
| 
அரண் அடு திகிரி ஏந்திய தோளே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.
 | 
| 
 100 | 
| 
கையது வேலே; காலன புனை கழல்; | |
| 
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; | |
| 
வட்கர் போகிய வளர் இளம் போந்தை | |
| 
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, | |
| 
5 | 
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, | 
| 
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, | |
| 
வரிவயம் பொருத வயக் களிறு போல, | |
| 
இன்னும் மாறாது சினனே; அன்னோ! | |
| 
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; | |
| 
10 | 
செறுவர் நோக்கிய கண், தன் | 
| 
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. | |
| 
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
 | |
| 
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
 | 
| 
 101 | 
| 
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்; | |
| 
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும், | |
| 
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ | |
| 
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி | |
| 
5 | 
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம் | 
| 
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன் | |
| 
கோட்டு இடை வைத்த கவளம் போலக் | |
| 
கையகத்தது; அது பொய் ஆகாதே; | |
| 
அருந்த ஏமாந்த நெஞ்சம்! | |
| 
10 | 
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! | 
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 103 | 
| 
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத் | |
| 
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி, | |
| 
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச் | |
| 
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி! | |
| 
5 | 
செல்வைஆயின், சேணோன் அல்லன்; | 
| 
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை | |
| 
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் | |
| 
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி; | |
| 
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை | |
| 
10 | 
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப, | 
| 
அலத்தற் காலை ஆயினும், | |
| 
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே! | |
| 
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
 | 
| 
 104 | 
| 
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை: | |
| 
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் | |
| 
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் | |
| 
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை | |
| 
5 | 
நுண் பல் கருமம் நினையாது, | 
| 
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே. | |
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 115 | 
| 
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் | |
| 
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், | |
| 
வாக்க உக்க தேக் கள் தேறல் | |
| 
கல் அலைத்து ஒழுகும்மன்னே! பல் வேல், | |
| 
5 | 
அண்ணல் யானை, வேந்தர்க்கு | 
| 
இன்னான் ஆகிய இனியோன் குன்றே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 116 | 
| 
தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் | |
| 
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், | |
| 
ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர் | |
| 
புல் மூசு கவலைய முள் மிடை வேலி, | |
| 
5 | 
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், | 
| 
பீரை நாறிய சுரை இவர் மருங்கின், | |
| 
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர் | |
| 
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ; | |
| 
நோகோ யானே; தேய்கமா, காலை! | |
| 
10 | 
பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும், | 
| 
பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும், | |
| 
கலையும் கொள்ளாவாக, பலவும் | |
| 
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் | |
| 
யாணர் அறாஅ வியல் மலை அற்றே | |
| 
15 | 
அண்ணல் நெடு வரை ஏறி, தந்தை | 
| 
பெரிய நறவின், கூர் வேல் பாரியது | |
| 
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த | |
| 
வலம் படு தானை வேந்தர் | |
| 
பொலம் படைக் கலி மா எண்ணுவோரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 117 | 
| 
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும், | |
| 
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், | |
| 
வயலகம் நிறைய, புதல் பூ மலர, | |
| 
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண் | |
| 
5 | 
ஆமா நெடு நிரை நன் புல் ஆர, | 
| 
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, | |
| 
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே | |
| 
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் | |
| 
பாசிலை முல்லை முகைக்கும் | |
| 
10 | 
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 118 | 
| 
அறையும் பொறையும் மணந்த தலைய, | |
| 
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத் | |
| 
தெள் நீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ | |
| 
கூர் வேல் குவைஇய மொய்ம்பின் | |
| 
5 | 
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 119 | 
| 
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை, | |
| 
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப, | |
| 
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து; | |
| 
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ | |
| 
5 | 
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல, | 
| 
பணை கெழு வேந்தரை இறந்தும் | |
| 
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 120 | 
| 
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் | |
| 
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து, | |
| 
பூழி மயங்கப் பல உழுது, வித்தி, | |
| 
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக் | |
| 
5 | 
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, | 
| 
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி, | |
| 
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து, | |
| 
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து, | |
| 
வாலிதின் விளைந்த புது வரகு அரிய, | |
| 
10 | 
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக் | 
| 
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக, | |
| 
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் | |
| 
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து, | |
| 
நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு, | |
| 
15 | 
பெருந்தோள் தாலம் பூசல் மேவர, | 
| 
வருந்தா யாணர்த்து; நந்தும்கொல்லோ | |
| 
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை | |
| 
ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர் | |
| 
பாடி ஆனாப் பண்பின் பகைவர் | |
| 
20 | 
ஓடு கழல் கம்பலை கண்ட | 
| 
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 206 | 
| 
வாயிலோயே! வாயிலோயே! | |
| 
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம் | |
| 
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து | |
| 
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் | |
| 
5 | 
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! | 
| 
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி | |
| 
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்? | |
| 
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, | |
| 
வறுந் தலை உலகமும் அன்றே; அதனால், | |
| 
10 | 
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; | 
| 
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் | |
| 
மழுவுடைக் காட்டகத்து அற்றே | |
| 
எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.
 | 
| 
 208 | 
| 
'குன்றும் மலையும் பல பின் ஒழிய, | |
| 
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என | |
| 
ஈங்கனம் செல்க, தான்' என, என்னை | |
| 
5 | 
யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்? | 
| 
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர் | |
| 
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி, | |
| 
தினை அனைத்துஆயினும், இனிது அவர் | |
| 
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது,'இது கொண்டு செல்க!' என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது, அவர் சொல்லியது.
 | 
| 
 231 | 
| 
எறி புனக் குறவன் குறையல் அன்ன | |
| 
கரி புற விறகின் ஈம ஒள் அழல், | |
| 
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று, | |
| 
விசும்புற நீளினும் நீள்க பசுங் கதிர்த் | |
| 
5 | 
திங்கள் அன்ன வெண்குடை | 
| 
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 | 
| 
 232 | 
| 
இல்லாகியரோ, காலை மாலை! | |
| 
அல்லாகியர், யான் வாழும் நாளே! | |
| 
நடுகல் பீலி சூட்டி, நார் அரி | |
| 
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்கொல்லோ | |
| 
5 | 
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய | 
| 
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 235 | 
| 
சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே! | |
| 
பெரிய கள் பெறினே, | |
| 
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! | |
| 
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! | |
| 
5 | 
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! | 
| 
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே! | |
| 
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே! | |
| 
நரந்தம் நாறும் தன் கையால், | |
| 
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே! | |
| 
10 | 
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ, | 
| 
இரப்போர் கையுளும் போகி, | |
| 
புரப்போர் புன்கண் பாவை சோர, | |
| 
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் | |
| 
சென்று வீழ்ந்தன்று, அவன் | |
| 
15 | 
அரு நிறத்து இயங்கிய வேலே! | 
| 
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? | |
| 
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை; | |
| 
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் | |
| 
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று | |
| 
20 | 
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 | 
| 
 310 | 
| 
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின், | |
| 
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு, | |
| 
உயவொடு வருந்தும் மன்னே! இனியே | |
| 
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான், | |
| 
5 | 
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே, | 
| 
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு | |
| 
மான் உளை அன்ன குடுமித் | |
| 
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பொன்முடியார் பாடியது.
 | 
| 
 315 | 
| 
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்; | |
| 
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்; | |
| 
மடவர் மகிழ் துணை; நெடு மான் அஞ்சி | |
| 
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல, | |
| 
5 | 
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் | 
| 
கான்று படு கனை எரி போல, | |
| 
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்காலே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 | 
| 
 390 | 
| 
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் | |
| 
மறவை நெஞ்சத்து ஆயிவாளர், | |
| 
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ், | |
| 
.................................................மன்ன முற்றத்து, | |
| 
5 | 
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் | 
| 
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர், | |
| 
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என் | |
| 
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் | |
| 
பாடி நின்ற பல் நாள் அன்றியும், | |
| 
10 | 
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் | 
| 
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற | |
| 
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என, | |
| 
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை | |
| 
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து, | |
| 
15 | 
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ, | 
| 
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும், | |
| 
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் | |
| 
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி, | |
| 
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை | |
| 
20 | 
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற, | 
| 
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன | |
| 
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி, | |
| 
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை | |
| 
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்; | |
| 
25 | 
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி, | 
| 
..................................................... | |
| 
வான் அறியல என் பாடு பசி போக்கல்; | |
| 
அண்ணல் யானை வேந்தர் | |
| 
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 |