| முகப்பு | தொடக்கம் | 
| 
அம்பர் கிழான் அருவந்தை | 
| 
 385 | 
| 
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப, | |
| 
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி, | |
| 
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, | |
| 
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி, | |
| 
5 | 
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை | 
| 
நீல் நிறச் சிதாஅர் களைந்து, | |
| 
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே; | |
| 
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை | |
| 
நெல் விளை கழனி அம்பர் கிழவோன், | |
| 
10 | 
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய | 
| 
வேங்கட விறல் வரைப் பட்ட | |
| 
ஓங்கல் வானத்து உறையினும் பலவே! | |
| 
திணை அது; துறை வாழ்த்தியல்.
 | |
| 
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.
 |