| முகப்பு | தொடக்கம் | 
| 
அவியன் | 
| 
 383 | 
| 
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து, | |
| 
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், | |
| 
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி, | |
| 
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி, | |
| 
5 | 
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து, | 
| 
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி, | |
| 
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் | |
| 
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள, | |
| 
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின் | |
| 
10 | 
கழை படு சொலியின் இழை அணி வாரா, | 
| 
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண் | |
| 
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி, | |
| 
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல, | |
| 
எற் பெயர்ந்த நோக்கி..................................... | |
| 
15 | 
.................................................கல் கொண்டு, | 
| 
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி, | |
| 
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே; | |
| 
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி, | |
| 
நரை முக ஊகமொடு, உகளும், சென................ | |
| 
20 | 
.......................கன்று பல கெழீஇய | 
| 
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என | |
| 
ஒருவனை உடையேன்மன்னே, யானே; | |
| 
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.
 |