| முகப்பு | தொடக்கம் | 
| 
ஆந்தை | 
| 
 67 | 
| 
அன்னச் சேவல்! அன்னச் சேவல்! | |
| 
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் | |
| 
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, | |
| 
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் | |
| 
5 | 
மையல் மாலை, யாம் கையறுபு இனைய, | 
| 
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, | |
| 
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது | |
| 
சோழ நல் நாட்டுப் படினே, கோழி | |
| 
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, | |
| 
10 | 
வாயில் விடாது கோயில் புக்கு, எம் | 
| 
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் | |
| 
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் | |
| 
இன்புறு பேடை அணிய, தன் | |
| 
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. | |
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
 | 
| 
 71 | 
| 
மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து, | |
| 
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து, | |
| 
என்னொடு பொருதும் என்ப; அவரை | |
| 
ஆர் அமர் அலறத் தாக்கி, தேரொடு | |
| 
5 | 
அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த | 
| 
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக; | |
| 
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து, | |
| 
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து | |
| 
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ் | |
| 
10 | 
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் | 
| 
பொய்யா யாணர் மையல் கோமான் | |
| 
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரை சால் | |
| 
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும், | |
| 
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும், | |
| 
15 | 
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த | 
| 
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ, | |
| 
மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த | |
| 
தென் புலம் காவலின் ஒரீஇ, பிறர் | |
| 
வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே! | |
| 
திணை காஞ்சி; துறை வஞ்சினக் காஞ்சி.
 | |
| 
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாட்டு.
 |