| முகப்பு | தொடக்கம் | 
| 
ஆய் | 
| 
 127 | 
| 
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப் | |
| 
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென, | |
| 
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில், | |
| 
கான மஞ்ஞை கணனொடு சேப்ப, | |
| 
5 | 
ஈகை அரிய இழை அணி மகளிரொடு | 
| 
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்; | |
| 
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில் | |
| 
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி, | |
| 
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய | |
| 
10 | 
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே. | 
| 
திணை அது; துறை கடைநிலை.
 | |
| 
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
 | 
| 
 128 | 
| 
மன்றப் பலவின் மாச் சினை மந்தி | |
| 
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் | |
| 
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின், | |
| 
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும், | |
| 
5 | 
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் | 
| 
ஆடுமகள் குறுகின் அல்லது, | |
| 
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே. | |
| 
திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 129 | 
| 
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் | |
| 
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, | |
| 
வேங்கை முன்றில் குரவை அயரும், | |
| 
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன் | |
| 
5 | 
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் | 
| 
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று, | |
| 
வானம் மீன் பல பூப்பின், ஆனாது | |
| 
ஒரு வழிக் கரு வழி இன்றிப் | |
| 
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 130 | 
| 
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு | |
| 
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ? | |
| 
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு, | |
| 
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த | |
| 
5 | 
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க் | 
| 
குட கடல் ஓட்டிய ஞான்றைத் | |
| 
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 131 | 
| 
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன், | |
| 
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன், | |
| 
குன்றம் பாடினகொல்லோ | |
| 
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 132 | 
| 
முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே! | |
| 
ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே! | |
| 
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே! | |
| 
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி | |
| 
5 | 
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல | 
| 
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும் | |
| 
வட திசையதுவே வான் தோய் இமயம். | |
| 
தென் திசை ஆஅய் குடி இன்றாயின், | |
| 
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 133 | 
| 
மெல் இயல் விறலி! நீ நல் இசை செவியின் | |
| 
கேட்பின் அல்லது, காண்பு அறியலையே; | |
| 
காண்டல் வேண்டினைஆயின் மாண்ட நின் | |
| 
விரை வளர் கூந்தல் வரை வளி உளர, | |
| 
5 | 
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி, | 
| 
மாரி அன்ன வண்மைத் | |
| 
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே! | |
| 
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 134 | 
| 
'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும் | |
| 
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்; | |
| 
பிறரும் சான்றோர் சென்ற நெறி என, | |
| 
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 135 | 
| 
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை, | |
| 
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி, | |
| 
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின், | |
| 
வளைக் கை விறலி என் பின்னள் ஆக, | |
| 
5 | 
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் | 
| 
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப, | |
| 
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் | |
| 
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ, | |
| 
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி, | |
| 
10 | 
வந்தனென் எந்தை! யானே: என்றும், | 
| 
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு | |
| 
கறை அடி யானை இரியல் போக்கும் | |
| 
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்! | |
| 
களிறும் அன்றே; மாவும் அன்றே; | |
| 
15 | 
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே; | 
| 
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர், | |
| 
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப் | |
| 
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு, | |
| 
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக் | |
| 
20 | 
காண்டல் வேண்டிய அளவை வேண்டார் | 
| 
உறு முரண் கடந்த ஆற்றல் | |
| 
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே! | |
| 
திணை அது; துறை பரிசில் துறை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 136 | 
| 
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப | |
| 
இழை வலந்த பல் துன்னத்து | |
| 
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ | |
| 
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த | |
| 
5 | 
பேஎன் பகை என ஒன்று என்கோ? | 
| 
உண்ணாமையின் ஊன் வாடி, | |
| 
தெண் நீரின் கண் மல்கி, | |
| 
கசிவுற்ற என் பல் கிளையொடு | |
| 
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ? | |
| 
10 | 
அன்ன தன்மையும் அறிந்து ஈயார், | 
| 
'நின்னது தா' என, நிலை தளர, | |
| 
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், | |
| 
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர் | |
| 
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ? | |
| 
15 | 
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்' | 
| 
எனக் கருதி, பெயர் ஏத்தி, | |
| 
வாய் ஆர நின் இசை நம்பி, | |
| 
சுடர் சுட்ட சுரத்து ஏறி, | |
| 
இவண் வந்த பெரு நசையேம்; | |
| 
20 | 
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; | 
| 
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என, | |
| 
அனைத்து உரைத்தனன் யான் ஆக, | |
| 
நினக்கு ஒத்தது நீ நாடி, | |
| 
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும், | |
| 
25 | 
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை | 
| 
நுண் பல மணலினும் ஏத்தி, | |
| 
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே. | |
| 
திணை அது; துறை பரிசில் கடாநிலை.
 | |
| 
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.
 | 
| 
 240 | 
| 
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும், | |
| 
வாடா யாணர் நாடும் ஊரும், | |
| 
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் | |
| 
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு, | |
| 
5 | 
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப, | 
| 
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ, | |
| 
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை, | |
| 
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும் | |
| 
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி, | |
| 
10 | 
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது; | 
| 
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது, | |
| 
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர் | |
| 
வாடிய பசியராகி, பிறர் | |
| 
நாடு படு செலவினர் ஆயினர், இனியே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.
 | 
| 
 241 | 
| 
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், | |
| 
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி | |
| 
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், | |
| 
போர்ப்புறு முரசம் கறங்க, | |
| 
5 | 
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
 |