| முகப்பு | தொடக்கம் | 
| 
ஆய் அண்டிரன் | 
| 
 129 | 
| 
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் | |
| 
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து, | |
| 
வேங்கை முன்றில் குரவை அயரும், | |
| 
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன் | |
| 
5 | 
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல் | 
| 
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று, | |
| 
வானம் மீன் பல பூப்பின், ஆனாது | |
| 
ஒரு வழிக் கரு வழி இன்றிப் | |
| 
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 374 | 
| 
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் | |
| 
புல்வாய் இரலை நெற்றி அன்ன, | |
| 
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் | |
| 
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர், | |
| 
5 | 
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என் | 
| 
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, | |
| 
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர, | |
| 
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட, | |
| 
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர் | |
| 
10 | 
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா | 
| 
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை, | |
| 
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம், | |
| 
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும், | |
| 
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ, | |
| 
15 | 
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன், | 
| 
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல, | |
| 
வண்மையும் உடையையோ? ஞாயிறு! | |
| 
கொன் விளங்குதியால் விசும்பினானே! | |
| 
திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
 | |
| 
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
 | 
| 
 375 | 
| 
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி, | |
| 
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற் | |
| 
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக, | |
| 
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல் | |
| 
5 | 
நாரும் போழும் கிணையொடு சுருக்கி, | 
| 
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ, | |
| 
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் | |
| 
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப் | |
| 
பிரசம் தூங்கும் அறாஅ யாணர், | |
| 
10 | 
வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந! | 
| 
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்! | |
| 
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது, | |
| 
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும் | |
| 
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால் | |
| 
15 | 
புலவர் புக்கில் ஆகி, நிலவரை | 
| 
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே | |
| 
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து, | |
| 
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி, | |
| 
பெரிய ஓதினும் சிறிய உணராப் | |
| 
20 | 
பீடு இன்று பெருகிய திருவின், | 
| 
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே! | |
| 
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 |