| முகப்பு | தொடக்கம் | 
| 
இளந் தத்தன் | 
| 
 47 | 
| 
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி, | |
| 
'நெடிய' என்னாது சுரம் பல கடந்து | |
| 
வடியா நாவின் வல்லாங்குப் பாடி, | |
| 
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி, | |
| 
5 | 
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, | 
| 
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை | |
| 
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட | |
| 
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, | |
| 
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் | |
| 
10 | 
மண் ஆள் செல்வம் எய்திய | 
| 
நும் ஓரன்ன செம்மலும் உடைத்தே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் நளங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, 'ஒற்று வந்தான்' என்று கொல்லப் புக்குழி, கோவூர் கிழார் பாடி, உய்யக்கொண்டது.
 |