| முகப்பு | தொடக்கம் | 
| 
இள வெளிமான் | 
| 
 207 | 
| 
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ, | |
| 
பருகு அன்ன வேட்கை இல்வழி, | |
| 
அருகில் கண்டும் அறியார் போல, | |
| 
அகம் நக வாரா முகன் அழி பரிசில் | |
| 
5 | 
தாள் இலாளர் வேளார் அல்லர்? | 
| 
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே | |
| 
பெரிதே உலகம்; பேணுநர் பலரே; | |
| 
மீளி முன்பின் ஆளி போல, | |
| 
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென | |
| 
10 | 
நோவாதோன்வயின் திரங்கி, | 
| 
வாயா வன் கனிக்கு உலமருவோரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானை, 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
 | 
| 
 237 | 
| 
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, | |
| 
பாடி நின்ற பசி நாட்கண்ணே, | |
| 
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, | |
| 
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் | |
| 
5 | 
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என | 
| 
நச்சி இருந்த நசை பழுதாக, | |
| 
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, | |
| 
'அளியர்தாமே ஆர்க' என்னா | |
| 
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, | |
| 
10 | 
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் | 
| 
வாழைப் பூவின் வளை முறி சிதற, | |
| 
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, | |
| 
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, | |
| 
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: | |
| 
15 | 
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் | 
| 
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், | |
| 
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் | |
| 
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, | |
| 
நனியுடைப் பரிசில் தருகம், | |
| 
20 | 
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
 |