| முகப்பு | தொடக்கம் | 
| 
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் | 
| 
 180 | 
| 
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; | |
| 
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே; | |
| 
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து | |
| 
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து, | |
| 
5 | 
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி, | 
| 
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து, | |
| 
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்; | |
| 
இன்மை தீர வேண்டின், எம்மொடு | |
| 
நீயும் வம்மோ? முது வாய் இரவல! | |
| 
10 | 
யாம் தன் இரக்கும்காலை, தான் எம் | 
| 
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க் | |
| 
கருங் கைக் கொல்லனை இரக்கும், | |
| 
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே. | |
| 
திணையும் துறையும் அவை; துறை பாணாற்றுப் படையும் ஆம்.
 | |
| 
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
 |