| முகப்பு | தொடக்கம் | 
| 
ஓய்மான் நல்லியாதன் | 
| 
 376 | 
| 
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் | |
| 
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி | |
| 
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச் | |
| 
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ, | |
| 
5 | 
பாணர் ஆரும்அளவை, யான் தன் | 
| 
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்; | |
| 
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென, | |
| 
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற, | |
| 
பண்டு அறிவாரா உருவோடு, என் அரைத் | |
| 
10 | 
தொன்று படு துளையொடு பரு இழை போகி, | 
| 
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி, | |
| 
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை | |
| 
நின்ற முரற்கை நீக்கி, நன்றும் | |
| 
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு, | |
| 
15 | 
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே, | 
| 
இரவினானே, ஈத்தோன் எந்தை; | |
| 
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும், | |
| 
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்; | |
| 
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்; | |
| 
20 | 
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி, | 
| 
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை, | |
| 
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி, | |
| 
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.
 |