| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் கடுங்கோ வாழியாதன் | 
| 
 8 | 
| 
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக, | |
| 
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது, | |
| 
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, | |
| 
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை, | |
| 
5 | 
கடந்து அடு தானைச் சேரலாதனை | 
| 
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்! | |
| 
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி; | |
| 
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி; | |
| 
அகல் இரு விசும்பினானும் | |
| 
10 | 
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே. | 
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
 | |
| 
சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
 |