| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் கணைக்கால் இரும்பொறை | 
| 
 74 | 
| 
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், | |
| 
'ஆள் அன்று' என்று வாளின் தப்பார்; | |
| 
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய | |
| 
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம், | |
| 
5 | 
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய, | 
| 
தாம் இரந்து உண்ணும் அளவை | |
| 
ஈன்மரோ, இவ் உலகத்தானே? | |
| 
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி. | |
| 
சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, 'தண்ணீர் தா' என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து
 | |
| 
உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.
 |