| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் | 
| 
 62 | 
| 
வரு தார் தாங்கி, அமர் மிகல் யாவது? | |
| 
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு, | |
| 
குருதி செங் கைக் கூந்தல் தீட்டி, | |
| 
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் | |
| 
5 | 
எடுத்து எறி அனந்தல் பறைச் சீர் தூங்க, | 
| 
பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து, | |
| 
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர் | |
| 
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே; | |
| 
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே; | |
| 
10 | 
பல் நூறு அடுக்கிய வேறு படு பைஞ் ஞிலம் | 
| 
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை, | |
| 
களம் கொளற்கு உரியோர் இன்றி, தெறுவர, | |
| 
உடன் வீழ்ந்தன்றால், அமரே; பெண்டிரும் | |
| 
பாசடகு மிசையார், பனி நீர் மூழ்கார், | |
| 
15 | 
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே; | 
| 
வாடாப் பூவின், இமையா நாட்டத்து, | |
| 
நாற்ற உணவினோரும் ஆற்ற | |
| 
அரும் பெறல் உலகம் நிறைய | |
| 
விருந்து பெற்றனரால்; பொலிக, நும் புகழே! | |
| 
திணை தும்பை; துறை தொகை நிலை.
 | |
| 
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.
 | 
| 
 63 | 
| 
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி, | |
| 
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே; | |
| 
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் | |
| 
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே; | |
| 
5 | 
தேர் தர வந்த சான்றோர் எல்லாம், | 
| 
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே; | |
| 
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம், | |
| 
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே; | |
| 
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென, | |
| 
10 | 
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே, | 
| 
என் ஆவதுகொல்தானே கழனி | |
| 
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் | |
| 
பாசவல் முக்கி, தண் புனல் பாயும், | |
| 
யாணர் அறாஅ வைப்பின் | |
| 
15 | 
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே? | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.
 | 
| 
 368 | 
| 
களிறு முகந்து பெயர்குவம் எனினே, | |
| 
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல, | |
| 
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன; | |
| 
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே; | |
| 
5 | 
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி, | 
| 
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே; | |
| 
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே, | |
| 
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி, | |
| 
வளி வழக்கு அறுத்த வங்கம் போல, | |
| 
10 | 
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க | 
| 
முகவை இன்மையின் உகவை இன்றி, | |
| 
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து, | |
| 
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ! | |
| 
கடாஅ யானைக் கால்வழி அன்ன என் | |
| 
15 | 
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி, | 
| 
பாடி வந்தது எல்லாம், கோடியர் | |
| 
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் | |
| 
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. | |
| 
திணை வாகை; துறை மறக்களவழி.
 | |
| 
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.
 |