| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதையின் பெருங் கோப்பெண்டு | 
| 
 245 | 
| 
யாங்குப் பெரிதுஆயினும், நோய் அளவு எனைத்தே, | |
| 
உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்? | |
| 
கள்ளி போகிய களரி மருங்கின் | |
| 
வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து, | |
| 
5 | 
ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி, | 
| 
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை; | |
| 
இன்னும் வாழ்வல்; என் இதன் பண்பே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டு துஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு.
 |