| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாத ன் | 
| 
 387 | 
| 
வள் உகிர வயல் ஆமை | |
| 
வெள் அகடு கண்டன்ன, | |
| 
வீங்கு விசிப் புதுப் போர்வைத் | |
| 
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும் | |
| 
5 | 
மாறு கொண்டோர் மதில் இடறி, | 
| 
நீறு ஆடிய நறுங் கவுள, | |
| 
பூம் பொறிப் பணை எருத்தின, | |
| 
வேறு வேறு பரந்து இயங்கி, | |
| 
வேந்துடை மிளை அயல் பரக்கும் | |
| 
10 | 
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை, | 
| 
திருந்து தொழில் பல பகடு | |
| 
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின் | |
| 
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி, | |
| 
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று, | |
| 
15 | 
யான் இசைப்பின், நனி நன்று எனா, | 
| 
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?......... | |
| 
மருவ இன் நகர் அகன்................................. | |
| 
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி, | |
| 
வென்று இரங்கும் விறல் முரசினோன், | |
| 
20 | 
என் சிறுமையின், இழித்து நோக்கான், | 
| 
தன் பெருமையின் தகவு நோக்கி, | |
| 
குன்று உறழ்ந்த களிறு என்கோ? | |
| 
கொய் உளைய மா என்கோ? | |
| 
மன்று நிறையும் நிரை என்கோ? | |
| 
25 | 
மனைக் களமரொடு களம் என்கோ? | 
| 
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின் | |
| 
நல்கியோனே, நசைசால் தோன்றல், | |
| 
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்! | |
| 
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள் | |
| 
30 | 
செல்வக் கடுங்கோ வாழியாதன் | 
| 
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண் | |
| 
விடுவர் மாதோ நெடிதே நி | |
| 
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் | |
| 
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண் | |
| 
35 | 
பல் ஊர் சுற்றிய கழனி | 
| 
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.
 |