| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை | 
| 
 50 | 
| 
மாசு அற விசித்த வார்புறு வள்பின் | |
| 
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை | |
| 
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார், | |
| 
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி, | |
| 
5 | 
குருதி வேட்கை உரு கெழு முரசம் | 
| 
மண்ணி வாரா அளவை, எண்ணெய் | |
| 
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை | |
| 
அறியாது ஏறிய என்னைத் தெறுவர, | |
| 
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை | |
| 
10 | 
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்; | 
| 
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் | |
| 
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென | |
| 
வீசியோயே; வியலிடம் கமழ, | |
| 
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது | |
| 
15 | 
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை | 
| 
விளங்கக் கேட்ட மாறுகொல் | |
| 
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே? | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.
 |