| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் பெருஞ்சேரலாதன் | 
| 
 65 | 
| 
மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப, | |
| 
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப, | |
| 
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப, | |
| 
உழவர் ஓதை மறப்ப, விழவும் | |
| 
5 | 
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, | 
| 
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து, | |
| 
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் | |
| 
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு, | |
| 
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த | |
| 
10 | 
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன் | 
| 
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு, | |
| 
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே. | |
| 
திணை பொதுவியல்; துறை கையறு நிலை.
 | |
| 
சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.
 |