| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை | 
| 
 125 | 
| 
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, | |
| 
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை, | |
| 
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர | |
| 
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே, | |
| 
5 | 
நள்ளாதார் மிடல் சாய்த்த | 
| 
வல்லாள! நின் மகிழ் இருக்கையே. | |
| 
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு | |
| 
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே; | |
| 
குன்றத்து அன்ன களிறு பெயர, | |
| 
10 | 
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே; | 
| 
'வெலீஇயோன் இவன்' என, | |
| 
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு | |
| 
விரைந்து வந்து, சமம் தாங்கிய, | |
| 
வல் வேல் மலையன் அல்லன் ஆயின், | |
| 
15 | 
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத் | 
| 
தோற்றோன்தானும், நிற் கூறும்மே, | |
| 
'தொலைஇயோன் இவன்' என, | |
| 
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு | |
| 
இருக்கை சான்ற உயர் மலைத் | |
| 
20 | 
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே. | 
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.
 |