| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் மாரி வெண்கோ | 
| 
 367 | 
| 
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் | |
| 
தமவேஆயினும் தம்மொடு செல்லா; | |
| 
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; | |
| 
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப் | |
| 
5 | 
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, | 
| 
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய | |
| 
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, | |
| 
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி, | |
| 
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; | |
| 
10 | 
வாழச் செய்த நல்வினை அல்லது | 
| 
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை; | |
| 
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் | |
| 
முத்தீப் புரையக் காண்தக இருந்த | |
| 
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்! | |
| 
15 | 
யான் அறி அளவையோ இதுவே: வானத்து | 
| 
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் | |
| 
பரந்து இயங்கு மா மழை உறையினும், | |
| 
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே! | |
| 
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
 | |
| 
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.
 |