| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் யானைக்கட் சேஎய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை | 
| 
 22 | 
| 
தூங்கு கையான் ஓங்கு நடைய, | |
| 
உறழ் மணியான் உயர் மருப்பின, | |
| 
பிறை நுதலான் செறல் நோக்கின, | |
| 
பா அடியான் பணை எருத்தின, | |
| 
5 | 
தேன் சிதைந்த வரை போல, | 
| 
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து, | |
| 
அயறு சோரும் இருஞ் சென்னிய, | |
| 
மைந்து மலிந்த மழ களிறு | |
| 
கந்து சேர்பு நிலைஇ வழங்க; | |
| 
10 | 
பாஅல் நின்று கதிர் சோரும் | 
| 
வான் உறையும் மதி போலும் | |
| 
மாலை வெண் குடை நீழலான், | |
| 
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க; | |
| 
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த | |
| 
15 | 
ஆய் கரும்பின் கொடிக் கூரை, | 
| 
சாறு கொண்ட களம் போல, | |
| 
வேறு வேறு பொலிவு தோன்ற; | |
| 
குற்று ஆனா உலக்கையான் | |
| 
கலிச் சும்மை வியல் ஆங்கண், | |
| 
20 | 
பொலந் தோட்டுப் பைந் தும்பை | 
| 
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ, | |
| 
சின மாந்தர் வெறிக் குரவை | |
| 
ஓத நீரின் பெயர்பு பொங்க; | |
| 
வாய் காவாது பரந்து பட்ட | |
| 
25 | 
வியன் பாசறைக் காப்பாள! | 
| 
வேந்து தந்த பணி திறையான் | |
| 
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், | |
| 
ஓங்கு கொல்லியோர், அடு பொருந! | |
| 
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! | |
| 
30 | 
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, | 
| 
நிற் பாடிய வயங்கு செந் நாப் | |
| 
பின் பிறர் இசை நுவலாமை, | |
| 
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! | |
| 
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே | |
| 
35 | 
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து, | 
| 
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை, | |
| 
வேறு புலத்து இறுக்கும் தானையொடு, | |
| 
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே! | |
| 
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
 | |
| 
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
 |