| முகப்பு | தொடக்கம் | 
| 
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை | 
| 
 20 | 
| 
இரு முந்நீர்க் குட்டமும், | |
| 
வியல் ஞாலத்து அகலமும், | |
| 
வளி வழங்கு திசையும், | |
| 
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு | |
| 
5 | 
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை, | 
| 
அறிவும், ஈரமும், பெருங் கண்ணோட்டமும்: | |
| 
சோறு படுக்கும் தீயோடு | |
| 
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது | |
| 
பிறிது தெறல் அறியார், நின் நிழல் வாழ்வோரே; | |
| 
10 | 
திருவில் அல்லது கொலை வில் அறியார்; | 
| 
நாஞ்சில் அல்லது படையும் அறியார்; | |
| 
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய, அப் | |
| 
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு | |
| 
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது, | |
| 
15 | 
பகைவர் உண்ணா அரு மண்ணினையே; | 
| 
அம்பு துஞ்சும் கடி அரணால், | |
| 
அறம் துஞ்சும் செங்கோலையே; | |
| 
புதுப் புள் வரினும், பழம் புள் போகினும், | |
| 
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை; | |
| 
20 | 
அனையை ஆகல்மாறே, | 
| 
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
 |