| முகப்பு | தொடக்கம் | 
| 
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி | 
| 
 16 | 
| 
வினை மாட்சிய விரை புரவியொடு, | |
| 
மழை உருவின தோல் பரப்பி, | |
| 
முனை முருங்கத் தலைச் சென்று, அவர் | |
| 
விளை வயல் கவர்பூட்டி, | |
| 
5 | 
மனை மரம் விறகு ஆகக் | 
| 
கடி துறை நீர்க் களிறு படீஇ, | |
| 
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் | |
| 
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற, | |
| 
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை, | |
| 
10 | 
துணை வேண்டாச் செரு வென்றி, | 
| 
புலவு வாள், புலர் சாந்தின், | |
| 
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்! | |
| 
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல், | |
| 
பனிப் பகன்றை, கனிப் பாகல், | |
| 
15 | 
கரும்பு அல்லது காடு அறியாப் | 
| 
பெருந் தண் பணை பாழ் ஆக, | |
| 
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை, | |
| 
நாம நல் அமர் செய்ய, | |
| 
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே. | |
| 
திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
 | |
| 
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.
 | 
| 
 125 | 
| 
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன, | |
| 
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை, | |
| 
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர | |
| 
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே, | |
| 
5 | 
நள்ளாதார் மிடல் சாய்த்த | 
| 
வல்லாள! நின் மகிழ் இருக்கையே. | |
| 
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு | |
| 
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே; | |
| 
குன்றத்து அன்ன களிறு பெயர, | |
| 
10 | 
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே; | 
| 
'வெலீஇயோன் இவன்' என, | |
| 
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு | |
| 
விரைந்து வந்து, சமம் தாங்கிய, | |
| 
வல் வேல் மலையன் அல்லன் ஆயின், | |
| 
15 | 
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத் | 
| 
தோற்றோன்தானும், நிற் கூறும்மே, | |
| 
'தொலைஇயோன் இவன்' என, | |
| 
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு | |
| 
இருக்கை சான்ற உயர் மலைத் | |
| 
20 | 
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே. | 
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.
 | 
| 
 367 | 
| 
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் | |
| 
தமவேஆயினும் தம்மொடு செல்லா; | |
| 
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; | |
| 
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப் | |
| 
5 | 
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, | 
| 
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய | |
| 
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, | |
| 
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி, | |
| 
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; | |
| 
10 | 
வாழச் செய்த நல்வினை அல்லது | 
| 
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை; | |
| 
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் | |
| 
முத்தீப் புரையக் காண்தக இருந்த | |
| 
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்! | |
| 
15 | 
யான் அறி அளவையோ இதுவே: வானத்து | 
| 
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் | |
| 
பரந்து இயங்கு மா மழை உறையினும், | |
| 
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே! | |
| 
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
 | |
| 
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.
 | 
| 
 377 | 
| 
பனி பழுநிய பல் யாமத்துப் | |
| 
பாறு தலை மயிர் நனைய, | |
| 
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின், | |
| 
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி, | |
| 
5 | 
'அவி உணவினோர் புறங்காப்ப, | 
| 
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று, | |
| 
அதற் கொண்டு வரல் ஏத்தி, | |
| 
'''கரவு இல்லாக் கவி வண் கையான், | |
| 
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர் | |
| 
10 | 
பிறர்க்கு உவமம் தான் அல்லது, | 
| 
தனக்கு உவமம் பிறர் இல்' என, | |
| 
அது நினைந்து, மதி மழுகி, | |
| 
ஆங்கு நின்ற எற் காணூஉச் | |
| 
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை! | |
| 
15 | 
நீ புரவலை, எமக்கு' என்ன, | 
| 
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், | |
| 
கடல் பயந்த கதிர் முத்தமும், | |
| 
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும், | |
| 
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப, | |
| 
20 | 
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்; | 
| 
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்; | |
| 
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்; | |
| 
.........................பொற் கோட்டு யானையர், | |
| 
கவர் பரிக் கச்சை நல் மான், | |
| 
25 | 
வடி மணி, வாங்கு உருள, | 
| 
.....................,..........நல் தேர்க் குழுவினர், | |
| 
கதழ் இசை வன்கணினர், | |
| 
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி, | |
| 
கடல் ஒலி கொண்ட தானை | |
| 
30 | 
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே! | 
| 
திணை அது; துறை வாழ்த்தியல்.
 | |
| 
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.
 |