| முகப்பு | தொடக்கம் | 
| 
சோழன் உருவப் பல் தேர் இளஞ்சேட் சென்னி | 
| 
 4 | 
| 
வாள், வலம் தர, மறுப் பட்டன | |
| 
செவ் வானத்து வனப்புப் போன்றன; | |
| 
தாள், களம் கொள, கழல் பறைந்தன | |
| 
கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன; | |
| 
5 | 
தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ, | 
| 
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன; | |
| 
மாவே, எறி பதத்தான் இடம் காட்ட, | |
| 
கறுழ் பொருத செவ் வாயான், | |
| 
எருத்து வவ்விய புலி போன்றன; | |
| 
10 | 
களிறு, கதவு எறியா, சிவந்து, உராஅய், | 
| 
நுதி மழுங்கிய வெண் கோட்டான், | |
| 
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன; | |
| 
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப் | |
| 
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி, | |
| 
15 | 
மாக் கடல் நிவந்து எழுதரும் | 
| 
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ | |
| 
அனையை ஆகன்மாறே, | |
| 
தாய் இல் தூவாக் குழவி போல, | |
| 
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே. | |
| 
திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
 | |
| 
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பரணர் பாடியது.
 | 
| 
 266 | 
| 
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி, | |
| 
கயம் களி முளியும் கோடைஆயினும், | |
| 
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல், | |
| 
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை | |
| 
5 | 
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் | 
| 
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்! | |
| 
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி! | |
| 
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன், | |
| 
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல, | |
| 
10 | 
வல்லே களைமதிஅத்தை உள்ளிய | 
| 
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை, | |
| 
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என் | |
| 
அறிவு கெட நின்ற நல்கூர்மையே! | |
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
 | |
| 
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.
 |