| முகப்பு | தொடக்கம் | 
| 
சோழன் நலங்கிள்ளி | 
| 
 27 | 
| 
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், | |
| 
நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன, | |
| 
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து, | |
| 
வீற்றிருந்தோரை எண்ணும்காலை, | |
| 
5 | 
உரையும் பாட்டும் உடையோர் சிலரே; | 
| 
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே; | |
| 
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் | |
| 
வலவன் ஏவா வான ஊர்தி | |
| 
எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக் | |
| 
10 | 
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! | 
| 
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், | |
| 
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், | |
| 
அறியாதோரையும் அறியக் காட்டி, | |
| 
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து, | |
| 
15 | 
வல்லார் ஆயினும், வல்லுநர்ஆயினும், | 
| 
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, | |
| 
அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர் | |
| 
கொடாஅமை வல்லர் ஆகுக; | |
| 
கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே. | |
| 
திணை பொதுவியல்; துறை முதுமொழிக்காஞ்சி.
 | |
| 
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
 | 
| 
 28 | 
| 
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும், | |
| 
கூனும், குறளும், ஊமும், செவிடும், | |
| 
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு | |
| 
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் | |
| 
5 | 
பேதைமை அல்லது ஊதியம் இல்' என, | 
| 
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும், | |
| 
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது | |
| 
வட்ட வரிய செம் பொறிச் சேவல் | |
| 
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் | |
| 
10 | 
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே, | 
| 
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர் | |
| 
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப் | |
| 
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர் | |
| 
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே; | |
| 
15 | 
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் | 
| 
ஆற்றும், பெரும! நின் செல்வம்; | |
| 
ஆற்றாமை நிற் போற்றாமையே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 29 | 
| 
அழல் புரிந்த அடர் தாமரை | |
| 
ஐது அடர்ந்த நூல் பெய்து, | |
| 
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் | |
| 
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி, | |
| 
5 | 
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! | 
| 
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் | |
| 
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க | |
| 
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப, | |
| 
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், | |
| 
10 | 
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, | 
| 
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் | |
| 
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! | |
| 
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் | |
| 
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, | |
| 
15 | 
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின் | 
| 
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு | |
| 
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் | |
| 
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து, | |
| 
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச் | |
| 
20 | 
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு | 
| 
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை | |
| 
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில் | |
| 
கோடியர் நீர்மை போல முறைமுறை | |
| 
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய | |
| 
25 | 
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! | 
| 
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 30 | 
| 
செஞ் ஞாயிற்றுச் செலவும், | |
| 
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், | |
| 
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், | |
| 
வளி திரிதரு திசையும், | |
| 
5 | 
வறிது நிலைஇய காயமும், என்று இவை | 
| 
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும் | |
| 
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் | |
| 
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, | |
| 
களிறு கவுள் அடுத்த எறிகல் போல | |
| 
10 | 
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட | 
| 
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு | |
| 
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது | |
| 
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் | |
| 
இடைப் புலப் பெரு வழிச் சொரியும் | |
| 
15 | 
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே! | 
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 31 | 
| 
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் | |
| 
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல, | |
| 
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை, | |
| 
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க, | |
| 
5 | 
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப் | 
| 
பாசறை அல்லது நீ ஒல்லாயே; | |
| 
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் | |
| 
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே; | |
| 
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர், | |
| 
10 | 
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய; | 
| 
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென் | |
| 
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து, | |
| 
குண கடல் பின்னது ஆக, குட கடல் | |
| 
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப, | |
| 
15 | 
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து, | 
| 
நெஞ்சு நடுங்கு அவலம் பாய, | |
| 
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே. | |
| 
திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
 | |
| 
அவனைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 32 | 
| 
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப் | |
| 
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ? | |
| 
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள், | |
| 
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என, | |
| 
5 | 
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம் | 
| 
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்! | |
| 
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி | |
| 
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த | |
| 
பசு மண் குரூஉத் திரள் போல, அவன் | |
| 
10 | 
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. | 
| 
திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 33 | 
| 
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன் | |
| 
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் | |
| 
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய, | |
| 
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் | |
| 
5 | 
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் | 
| 
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் | |
| 
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும், | |
| 
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் | |
| 
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; | |
| 
10 | 
பாடுநர் வஞ்சி பாட, படையோர் | 
| 
தாது எரு மறுகின் பாசறை பொலிய, | |
| 
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த | |
| 
மலரா மாலைப் பந்து கண்டன்ன | |
| 
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் | |
| 
15 | 
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை | 
| 
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற | |
| 
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப, | |
| 
காம இருவர் அல்லது, யாமத்துத் | |
| 
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின், | |
| 
20 | 
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி | 
| 
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப, | |
| 
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே. | |
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 44 | 
| 
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, | |
| 
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, | |
| 
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, | |
| 
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, | |
| 
5 | 
அலமரல் யானை உரும் என முழங்கவும், | 
| 
பால் இல் குழவி அலறவும், மகளிர் | |
| 
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல் | |
| 
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும், | |
| 
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; | |
| 
10 | 
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! | 
| 
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்; | |
| 
மறவை ஆயின், போரொடு திறத்தல்; | |
| 
அறவையும் மறவையும் அல்லையாக, | |
| 
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் | |
| 
15 | 
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் | 
| 
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 45 | 
| 
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; | |
| 
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; | |
| 
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு | |
| 
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; | |
| 
5 | 
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; | 
| 
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், | |
| 
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் | |
| 
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு | |
| 
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. | |
| 
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
 | |
| 
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 68 | 
| 
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின் | |
| 
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது, | |
| 
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து, | |
| 
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து, | |
| 
5 | 
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து | 
| 
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின் | |
| 
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை, | |
| 
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் | |
| 
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் | |
| 
10 | 
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன், | 
| 
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு | |
| 
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என, | |
| 
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப, | |
| 
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி, | |
| 
15 | 
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த | 
| 
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை | |
| 
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும் | |
| 
உறந்தையோனே குருசில்; | |
| 
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே. | |
| 
திணை அது; துறை பாணாற்றுப்படை.
 | |
| 
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 225 | 
| 
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, | |
| 
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, | |
| 
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர, | |
| 
நில மலர் வையத்து வல முறை வளைஇ, | |
| 
5 | 
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, | 
| 
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி: | |
| 
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, | |
| 
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும் | |
| 
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என, | |
| 
10 | 
இன் இசைப் பறையொடு வென்றி நுவல, | 
| 
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப | |
| 
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, | |
| 
ஞாலங் காவலர் கடைத்தலை, | |
| 
காலைத் தோன்றினும் நோகோ யானே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
 | 
| 
 382 | 
| 
கடல்படை அடல் கொண்டி, | |
| 
மண்டுற்ற மலிர் நோன் தாள், | |
| 
தண் சோழ நாட்டுப் பொருநன், | |
| 
அலங்கு உளை அணி இவுளி | |
| 
5 | 
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; | 
| 
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்; | |
| 
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என; | |
| 
நெய் குய்ய ஊன் நவின்ற | |
| 
பல் சோற்றான், இன் சுவைய | |
| 
10 | 
நல்குரவின் பசித் துன்பின் நின் | 
| 
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும், | |
| 
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி, | |
| 
கண் கேள்வி, கவை நாவின், | |
| 
நிறன் உற்ற, அராஅப் போலும் | |
| 
15 | 
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப, | 
| 
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்! | |
| 
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய; | |
| 
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை | |
| 
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் | |
| 
20 | 
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர் | 
| 
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென், | |
| 
வென்ற தேர், பிறர் வேத்தவையானே. | |
| 
திணை அது; துறை கடைநிலை.
 | |
| 
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 400 | 
| 
மாக விசும்பின் வெண் திங்கள் | |
| 
மூ ஐந்தான் முறை முற்ற, | |
| 
கடல் நடுவண் கண்டன்ன என் | |
| 
இயம் இசையா, மரபு ஏத்தி, | |
| 
5 | 
கடைத் தோன்றிய கடைக் கங்குலான் | 
| 
பலர் துஞ்சவும் தான் துஞ்சான், | |
| 
உலகு காக்கும் உயர் ª..........க் | |
| 
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே; | |
| 
கேட்டதற்கொண்டும், வேட்கை தண்டாது, | |
| 
10 | 
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி, | 
| 
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு....... | |
| 
...................................................லவான | |
| 
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி, | |
| 
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து; | |
| 
15 | 
போது அறியேன், பதிப் பழகவும், | 
| 
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர் | |
| 
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ; | |
| 
மறவர் மலிந்த த............................................. | |
| 
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து, | |
| 
20 | 
இருங் கழி இழிதரு........ கலி வங்கம் | 
| 
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து, | |
| 
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர், | |
| 
உறைவு இன் யாணர்,........ கிழவோனே! | |
| 
திணை அது; துறை இயன்மொழி. |