| முகப்பு | தொடக்கம் | 
| 
சோழிய ஏனாதி திருக்குட்டுவன் | 
| 
 394 | 
| 
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின், | |
| 
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன், | |
| 
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன், | |
| 
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும், | |
| 
5 | 
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்! | 
| 
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை, | |
| 
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, | |
| 
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை | |
| 
வாடா வஞ்சி பாடினேனாக, | |
| 
10 | 
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி, | 
| 
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின் | |
| 
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி | |
| 
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது | |
| 
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர் | |
| 
15 | 
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு, | 
| 
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும், | |
| 
'துன் அரும் பரிசில் தரும்' என, | |
| 
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே. | |
| 
திணையும் துறையும் அவை. | |
| 
கடைநிலை ஆயின எல்லாம் பாடாண் திணை.
 | |
| 
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
 |