| முகப்பு | தொடக்கம் | 
| 
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் | 
| 
 371 | 
| 
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது, | |
| 
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி, | |
| 
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து, | |
| 
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி, | |
| 
5 | 
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய் | 
| 
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி, | |
| 
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப, | |
| 
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன், | |
| 
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி, | |
| 
10 | 
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப, | 
| 
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ, | |
| 
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, | |
| 
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி, | |
| 
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து, | |
| 
15 | 
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி | 
| 
அதரி திரித்த ஆள் உகு கடாவின், | |
| 
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி | |
| 
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின், | |
| 
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை, | |
| 
20 | 
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும! | 
| 
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி, | |
| 
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள், | |
| 
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின | |
| 
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து | |
| 
25 | 
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என, | 
| 
உரு கெழு பேய்மகள் அயர, | |
| 
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
 | 
| 
 372 | 
| 
விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி, | |
| 
ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த | |
| 
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி, | |
| 
கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறை, | |
| 
5 | 
பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின், | 
| 
கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல், | |
| 
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின், | |
| 
ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட | |
| 
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த, | |
| 
10 | 
'வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் | 
| 
வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க' எனப் | |
| 
புலவுக் களம் பொலிய வேட்டோய்! நின் | |
| 
நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே. | |
| 
திணை வாகை; துறை மறக்கள வேள்வி.
 | |
| 
அவனை மாங்குடி கிழார் பாடியது.
 |