| முகப்பு | தொடக்கம் | 
| 
தழும்பன் | 
| 
 348 | 
| 
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ, | |
| 
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய, | |
| 
கள் அரிக்கும் குயம், சிறு சில் | |
| 
மீன் சீவும் பாண் சேரி, | |
| 
5 | 
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன, | 
| 
குவளை உண்கண் இவளை, தாயே | |
| 
ஈனாளாயினள்ஆயின், ஆனாது | |
| 
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும், | |
| 
செந் நுதல் யானை பிணிப்ப, | |
| 
10 | 
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பரணர் பாடியது.
 |