| முகப்பு | தொடக்கம் | 
| 
தாமான் தோன்றிக் கோன் | 
| 
 399 | 
| 
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல் | |
| 
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி | |
| 
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல் | |
| 
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி, | |
| 
5 | 
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை, | 
| 
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல், | |
| 
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன | |
| 
மெய் களைந்து, இனனொடு விரைஇ, | |
| 
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல், | |
| 
10 | 
அழிகளின் படுநர் களி அட வைகின், | 
| 
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக் | |
| 
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக் | |
| 
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்; | |
| 
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்; | |
| 
15 | 
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து, | 
| 
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ் | |
| 
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு, | |
| 
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே, | |
| 
அறவர் அறவன், மறவர் மறவன், | |
| 
20 | 
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன், | 
| 
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என, | |
| 
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி, | |
| 
வள் பரிந்து கிடந்த.......................மணக்க | |
| 
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை, | |
| 
25 | 
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து, | 
| 
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன், | |
| 
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் | |
| 
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என, | |
| 
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே | |
| 
30 | 
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின் | 
| 
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை | |
| 
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள | |
| 
இழுமென இழிதரும் அருவி, | |
| 
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே. | |
| 
திணை அது; துறை பரிசில் விடை.
 | |
| 
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.
 |