| முகப்பு | தொடக்கம் | 
| 
தித்தன் | 
| 
 80 | 
| 
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண், | |
| 
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி, | |
| 
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால் | |
| 
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே | |
| 
5 | 
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப் | 
| 
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம | |
| 
பசித்துப் பணை முயலும் யானை போல, | |
| 
இரு தலை ஒசிய எற்றி, | |
| 
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே. | |
| 
திணை தும்பை; துறை எருமை மறம்.
 | |
| 
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.
 | 
| 
 352 | 
| 
தேஎம் கொண்ட வெண் மண்டையான், | |
| 
வீ...................................................கறக்குந்து; | |
| 
அவல் வகுத்த பசுங் குடையான், | |
| 
புதல் முல்லைப் பூப் பறிக்குந்து; | |
| 
5 | 
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் | 
| 
குன்று ஏறிப் புனல் பாயின், | |
| 
புற வாயால் புனல் வள | |
| 
.................................................... நொடை நறவின் | |
| 
மா வண் தித்தன் வெண்ணெல் வேலி | |
| 
10 | 
உறந்தை அன்ன உரைசால் நன் கலம் | 
| 
கொடுப்பவும் கொளாஅனெ | |
| 
.......................ர் தந்த நாகு இள வேங்கையின், | |
| 
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் | |
| 
மாக் கண் மலர்ந்த முலையள்; தன்னையும் | |
| 
15 | 
சிறு கோல் உளையும் புரவி ª.................. | 
| 
...................................................... யமரே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பரணர் பாடியது.
 | 
| 
 358 | 
| 
பருதி சூழ்ந்த இப் பயம் கெழு மா நிலம் | |
| 
ஒரு பகல் எழுவர் எய்தியற்றே; | |
| 
வையமும் தவமும் தூக்கின், தவத்துக்கு | |
| 
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின், | |
| 
5 | 
கைவிட்டனரே காதலர்; அதனால் | 
| 
விட்டோரை விடாஅள், திருவே; | |
| 
விடாஅதோர் இவள் விடப்பட்டோரே. | |
| 
திணை அது; துறை மனையறம், துறவறம்.
 | |
| 
வான்மீகியார் பாடியது.
 | 
| 
 395 | 
| 
மென் புலத்து வயல் உழவர் | |
| 
வன் புலத்துப் பகடு விட்டு, | |
| 
குறு முயலின் குழைச் சூட்டொடு | |
| 
நெடு வாளைப் பல் உவியல், | |
| 
5 | 
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி, | 
| 
புதல் தளவின் பூச் சூடி, | |
| 
........................................................ | |
| 
...........................அரியலாருந்து; | |
| 
மனைக் கோழிப் பைம் பயிரின்னே, | |
| 
10 | 
கானக் கோழிக் கவர் குரலொடு | 
| 
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து; | |
| 
வேய் அன்ன மென் தோளால், | |
| 
மயில் அன்ன மென் சாயலார், | |
| 
கிளி கடியின்னே, | |
| 
15 | 
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து; | 
| 
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் | |
| 
சீர் சான்ற விழுச் சிறப்பின், | |
| 
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன் | |
| 
செல்லா நல் இசை உறந்தைக் குணாது, | |
| 
20 | 
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர் | 
| 
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும! | |
| 
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி, | |
| 
கதிர் நனி செ ...................................... மாலை, | |
| 
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின், | |
| 
25 | 
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு, | 
| 
ஆங்கு நின்ற எற்கண்டு, | |
| 
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான், | |
| 
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி, | |
| 
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப் | |
| 
30 | 
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை | 
| 
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு, | |
| 
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே; | |
| 
அகன் ஞாலம் பெரிது வெம்பினும், | |
| 
மிக வானுள் எரி தோன்றினும், | |
| 
35 | 
குள மீனொடும் தாள் புகையினும், | 
| 
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் | |
| 
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி, | |
| 
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என, | |
| 
உள்ளதும் இல்லதும் அறியாது, | |
| 
40 | 
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.
 |