| முகப்பு | தொடக்கம் | 
| 
தொண்டைமான் | 
| 
 95 | 
| 
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி, | |
| 
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து, | |
| 
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே, | |
| 
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து, | |
| 
5 | 
கொல் துறைக் குற்றில மாதோ என்றும் | 
| 
உண்டாயின் பதம் கொடுத்து, | |
| 
இல்லாயின் உடன் உண்ணும், | |
| 
இல்லோர் ஒக்கல் தலைவன், | |
| 
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே. | |
| 
திணை பாடாண் திணை; துறை வாள் மங்கலம்.
 | |
| 
அவன் தூதுவிட, தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.
 |