| முகப்பு | தொடக்கம் | 
| 
நள்ளி | 
| 
 158 | 
| 
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும், | |
| 
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை, | |
| 
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் | |
| 
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக் | |
| 
5 | 
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்; | 
| 
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த, | |
| 
மாரி ஈகை, மறப் போர் மலையனும்; | |
| 
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல், | |
| 
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்; | |
| 
10 | 
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை, | 
| 
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை, | |
| 
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி | |
| 
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று | |
| 
உள்ளி வருநர் உலைவு நனி தீர, | |
| 
15 | 
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை, | 
| 
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு | |
| 
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப் | |
| 
பாடி வருநரும் பிறரும் கூடி | |
| 
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண் | |
| 
20 | 
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக் | 
| 
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி, | |
| 
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று, | |
| 
முள் புற முது கனி பெற்ற கடுவன் | |
| 
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும், | |
| 
25 | 
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ! | 
| 
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண! | |
| 
இசை மேந்தோன்றிய வண்மையொடு, | |
| 
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே! | |
| 
திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
 | |
| 
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.
 |