| முகப்பு | தொடக்கம் | 
| 
நெடியோன் | 
| 
 9 | 
| 
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், | |
| 
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் | |
| 
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் | |
| 
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், | |
| 
5 | 
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, | 
| 
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் | |
| 
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் | |
| 
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச் | |
| 
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, | |
| 
10 | 
முந்நீர் விழவின், நெடியோன் | 
| 
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
 | 
| 
 114 | 
| 
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை | |
| 
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற | |
| 
களிறு மென்று இட்ட கவளம் போல, | |
| 
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல் | |
| 
5 | 
வார் அசும்பு ஒழுகும் முன்றில், | 
| 
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.
 | 
| 
 241 | 
| 
'திண் தேர் இரவலர்க்கு, ஈத்த, தண் தார், | |
| 
அண்டிரன் வரூஉம்' என்ன, ஒண் தொடி | |
| 
வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள், | |
| 
போர்ப்புறு முரசம் கறங்க, | |
| 
5 | 
ஆர்ப்பு எழுந்தன்றால், விசும்பினானே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
 |