| முகப்பு | தொடக்கம் | 
| 
நெடுங்கிள்ளி | 
| 
 44 | 
| 
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா, | |
| 
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ, | |
| 
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி, | |
| 
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து, | |
| 
5 | 
அலமரல் யானை உரும் என முழங்கவும், | 
| 
பால் இல் குழவி அலறவும், மகளிர் | |
| 
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல் | |
| 
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும், | |
| 
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; | |
| 
10 | 
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்! | 
| 
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்; | |
| 
மறவை ஆயின், போரொடு திறத்தல்; | |
| 
அறவையும் மறவையும் அல்லையாக, | |
| 
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் | |
| 
15 | 
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் | 
| 
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
 | 
| 
 45 | 
| 
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்; | |
| 
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்; | |
| 
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு | |
| 
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; | |
| 
5 | 
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே; | 
| 
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால், | |
| 
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர் | |
| 
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு | |
| 
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே. | |
| 
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
 | |
| 
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.
 |