| முகப்பு | தொடக்கம் | 
| 
நெடுமான் அஞ்சி | 
| 
 315 | 
| 
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்; | |
| 
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்; | |
| 
மடவர் மகிழ் துணை; நெடு மான் அஞ்சி | |
| 
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல, | |
| 
5 | 
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் | 
| 
கான்று படு கனை எரி போல, | |
| 
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்காலே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 |