| முகப்பு | தொடக்கம் | 
| 
பரதவர் | 
| 
 24 | 
| 
நெல் அரியும் இருந் தொழுவர் | |
| 
செஞ் ஞாயிற்று வெயில் முனையின், | |
| 
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து; | |
| 
திண் திமில் வன் பரதவர் | |
| 
5 | 
வெப்பு உடைய மட்டு உண்டு, | 
| 
தண் குரவைச் சீர் தூங்குந்து; | |
| 
தூவல் கலித்த தேம் பாய் புன்னை | |
| 
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் | |
| 
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து; | |
| 
10 | 
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல் | 
| 
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் | |
| 
இரும் பனையின் குரும்பை நீரும், | |
| 
பூங் கரும்பின் தீம் சாறும், | |
| 
ஓங்கு மணல் குவவுத் தாழைத் | |
| 
15 | 
தீம் நீரொடு உடன் விராஅய், | 
| 
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்; | |
| 
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய | |
| 
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி | |
| 
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் | |
| 
20 | 
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும், | 
| 
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர், | |
| 
குப்பை நெல்லின், முத்தூறு தந்த | |
| 
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய! | |
| 
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது | |
| 
25 | 
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே | 
| 
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு | |
| 
நின்று மூத்த யாக்கை அன்ன, நின் | |
| 
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த | |
| 
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த, | |
| 
30 | 
இரவல் மாக்கள் ஈகை நுவல, | 
| 
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய | |
| 
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து, | |
| 
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது | |
| 
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை, | |
| 
35 | 
மலர் தலை உலகத்துத் தோன்றி, | 
| 
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே. | |
| 
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
 | |
| 
அவனை மாங்குடி கிழார் பாடியது.
 | 
| 
 30 | 
| 
செஞ் ஞாயிற்றுச் செலவும், | |
| 
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், | |
| 
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், | |
| 
வளி திரிதரு திசையும், | |
| 
5 | 
வறிது நிலைஇய காயமும், என்று இவை | 
| 
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும் | |
| 
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் | |
| 
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, | |
| 
களிறு கவுள் அடுத்த எறிகல் போல | |
| 
10 | 
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட | 
| 
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு | |
| 
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது | |
| 
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் | |
| 
இடைப் புலப் பெரு வழிச் சொரியும் | |
| 
15 | 
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே! | 
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 378 | 
| 
தென் பரதவர் மிடல் சாய, | |
| 
வட வடுகர் வாள் ஓட்டிய, | |
| 
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை, | |
| 
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின், | |
| 
5 | 
நல் தார், கள்ளின், சோழன் கோயில், | 
| 
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து, | |
| 
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என் | |
| 
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி, | |
| 
எஞ்சா மரபின் வஞ்சி பாட, | |
| 
10 | 
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, | 
| 
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை | |
| 
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு, | |
| 
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல், | |
| 
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும், | |
| 
15 | 
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும், | 
| 
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும், | |
| 
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், | |
| 
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை | |
| 
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, | |
| 
20 | 
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் | 
| 
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு, | |
| 
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே | |
| 
இருங் கிளைத் தலைமை எய்தி, | |
| 
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.
 |