| முகப்பு | தொடக்கம் | 
| 
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் | 
| 
 55 | 
| 
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, | |
| 
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி, | |
| 
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த | |
| 
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் | |
| 
5 | 
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல, | 
| 
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற! | |
| 
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும், | |
| 
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என | |
| 
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட | |
| 
10 | 
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்; | 
| 
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது, | |
| 
'பிறர்' எனக் குணம் கொல்லாது, | |
| 
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும், | |
| 
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும், | |
| 
15 | 
வானத்து அன்ன வண்மையும், மூன்றும், | 
| 
உடையை ஆகி, இல்லோர் கையற, | |
| 
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர் | |
| 
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் | |
| 
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை, | |
| 
20 | 
கடு வளி தொகுப்ப ஈண்டிய | 
| 
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே! | |
| 
திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
 | |
| 
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.
 | 
| 
 56 | 
| 
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை, | |
| 
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்; | |
| 
கடல் வளர் புரி வளை புரையும் மேனி, | |
| 
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்; | |
| 
5 | 
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, | 
| 
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும், | |
| 
மணி மயில் உயரிய மாறா வென்றி, | |
| 
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என | |
| 
ஞாலம் காக்கும் கால முன்பின், | |
| 
10 | 
தோலா நல் இசை, நால்வருள்ளும், | 
| 
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்; | |
| 
வலி ஒத்தீயே, வாலியோனை; | |
| 
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை; | |
| 
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்; | |
| 
15 | 
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும் | 
| 
அரியவும் உளவோ, நினக்கே? அதனால், | |
| 
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா, | |
| 
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் | |
| 
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும் | |
| 
20 | 
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து, | 
| 
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற! | |
| 
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் | |
| 
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத் | |
| 
தண் கதிர் மதியம் போலவும், | |
| 
25 | 
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே! | 
| 
திணை அது; துறை பூவை நிலை.
 | |
| 
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
 | 
| 
 57 | 
| 
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், | |
| 
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, | |
| 
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! | |
| 
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின், | |
| 
5 | 
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு | 
| 
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க; | |
| 
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க; | |
| 
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் | |
| 
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் | |
| 
10 | 
கடிமரம் தடிதல் ஓம்பு நின் | 
| 
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே. | |
| 
திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
 | |
| 
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
 | 
| 
 196 | 
| 
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் | |
| 
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும், | |
| 
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; | |
| 
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது | |
| 
5 | 
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே | 
| 
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர் | |
| 
புகழ் குறைபடூஉம் வாயில்அத்தை; | |
| 
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும் | |
| 
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால், | |
| 
10 | 
நோய் இலராக நின் புதல்வர்; யானும், | 
| 
வெயில் என முனியேன், பனி என மடியேன், | |
| 
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை, | |
| 
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல் | |
| 
மெல் இயல் குறு மகள் உள்ளிச் | |
| 
15 | 
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே! | 
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
 | |
| 
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.
 | 
| 
 198 | 
| 
'அருவி தாழ்ந்த பெரு வரை போல | |
| 
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா, | |
| 
கடவுள் சான்ற கற்பின், சேயிழை | |
| 
மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க் | |
| 
5 | 
கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி, | 
| 
திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி, | |
| 
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என் | |
| 
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப, | |
| 
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம், | |
| 
10 | 
வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின், | 
| 
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த | |
| 
தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆக, | |
| 
பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல் | |
| 
நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும், | |
| 
15 | 
ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும் | 
| 
பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின் | |
| 
முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்! | |
| 
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப் | |
| 
பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும், | |
| 
20 | 
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும், | 
| 
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும், | |
| 
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி, | |
| 
நீடு வாழிய! நெடுந்தகை! யானும் | |
| 
கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும், | |
| 
25 | 
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின் | 
| 
அடி நிழல் பழகிய அடியுறை; | |
| 
கடுமான் மாற! மறவாதீமே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.
 |