| முகப்பு | தொடக்கம் | 
| 
பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன் | 
| 
 59 | 
| 
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின், | |
| 
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி! | |
| 
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்; | |
| 
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும் | |
| 
5 | 
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் | 
| 
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு; | |
| 
திங்கள் அனையை, எம்மனோர்க்கே. | |
| 
திணை அது; துறை பூவை நிலை.
 | |
| 
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.
 |