| முகப்பு | தொடக்கம் | 
| 
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி | 
| 
 6 | 
| 
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும், | |
| 
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும், | |
| 
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும், | |
| 
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும், | |
| 
5 | 
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் | 
| 
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது | |
| 
ஆனிலை உலகத்தானும், ஆனாது, | |
| 
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த் | |
| 
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம் | |
| 
10 | 
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! | 
| 
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து, | |
| 
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச் | |
| 
சிறு கண் யானை செவ்விதின் ஏவி, | |
| 
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து, | |
| 
15 | 
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம் | 
| 
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி, | |
| 
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர் | |
| 
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே! | |
| 
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த | |
| 
20 | 
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே! | 
| 
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார் | |
| 
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே! | |
| 
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை | |
| 
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே! | |
| 
25 | 
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய | 
| 
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி! | |
| 
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர் | |
| 
ஒண் கதிர் ஞாயிறு போலவும், | |
| 
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! | |
| 
திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
 | |
| 
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.
 | 
| 
 9 | 
| 
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும், | |
| 
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் | |
| 
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும் | |
| 
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும், | |
| 
5 | 
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என, | 
| 
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின் | |
| 
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் | |
| 
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச் | |
| 
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த, | |
| 
10 | 
முந்நீர் விழவின், நெடியோன் | 
| 
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
 | 
| 
 12 | 
| 
பாணர் தாமரை மலையவும், புலவர் | |
| 
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும், | |
| 
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி! | |
| 
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு, | |
| 
5 | 
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே? | 
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
 | 
| 
 15 | 
| 
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், | |
| 
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, | |
| 
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்; | |
| 
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல், | |
| 
5 | 
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத் | 
| 
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து; | |
| 
துளங்கு இயலான், பணை எருத்தின், | |
| 
பாவு அடியான், செறல் நோக்கின், | |
| 
ஒளிறு மருப்பின் களிறு அவர | |
| 
10 | 
காப்பு உடைய கயம் படியினை; | 
| 
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின், | |
| 
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு | |
| 
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார் | |
| 
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார், | |
| 
15 | 
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய, | 
| 
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல் | |
| 
நல் பனுவல், நால் வேதத்து, | |
| 
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை | |
| 
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண் | |
| 
20 | 
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, | 
| 
யூபம் நட்ட வியன் களம் பலகொல்? | |
| 
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று | |
| 
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின் | |
| 
பாடினி பாடும் வஞ்சிக்கு | |
| 
25 | 
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
 | 
| 
 64 | 
| 
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி, | |
| 
செல்லாமோதில் சில் வளை விறலி! | |
| 
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை, | |
| 
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப, | |
| 
5 | 
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின் | 
| 
குடுமிக் கோமாற் கண்டு, | |
| 
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே? | |
| 
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
 | |
| 
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.
 |