| முகப்பு | தொடக்கம் | 
| 
பிசிராந்தையார் | 
| 
 67 | 
| 
அன்னச் சேவல்! அன்னச் சேவல்! | |
| 
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் | |
| 
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல, | |
| 
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் | |
| 
5 | 
மையல் மாலை, யாம் கையறுபு இனைய, | 
| 
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி, | |
| 
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது | |
| 
சோழ நல் நாட்டுப் படினே, கோழி | |
| 
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ, | |
| 
10 | 
வாயில் விடாது கோயில் புக்கு, எம் | 
| 
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர் | |
| 
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் | |
| 
இன்புறு பேடை அணிய, தன் | |
| 
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே. | |
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.
 | 
| 
 215 | 
| 
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் | |
| 
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய | |
| 
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ, | |
| 
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை | |
| 
5 | 
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் | 
| 
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் | |
| 
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே; | |
| 
செல்வக் காலை நிற்பினும், | |
| 
அல்லற் காலை நில்லலன்மன்னே. | |
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.
 | 
| 
 216 | 
| 
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் | |
| 
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய, | |
| 
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும், | |
| 
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று, | |
| 
5 | 
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்! | 
| 
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; | |
| 
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே; | |
| 
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர் | |
| 
பேதைச் சோழன்' என்னும், சிறந்த | |
| 
10 | 
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை, | 
| 
இன்னது ஓர் காலை நில்லலன்; | |
| 
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.
 | 
| 
 217 | 
| 
நினைக்கும் காலை மருட்கை உடைத்தே, | |
| 
எனைப் பெருஞ் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல்; | |
| 
அதனினும் மருட்கை உடைத்தே, பிறன் நாட்டுத் | |
| 
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி, | |
| 
5 | 
இசை மரபு ஆக, நட்புக் கந்து ஆக, | 
| 
இனையது ஓர் காலை ஈங்கு வருதல்; | |
| 
'வருவன்' என்ற கோனது பெருமையும், | |
| 
அது பழுது இன்றி வந்தவன் அறிவும், | |
| 
வியத்தொறும் வியத்தொறும் வியப்பு இறந்தன்றே; | |
| 
10 | 
அதனால், தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் | 
| 
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை | |
| 
அன்னோனை இழந்த இவ் உலகம் | |
| 
என் ஆவதுகொல்? அளியது தானே! | |
| 
திணை பொதுவியல்; துறை கையறுநிலை.
 | |
| 
அவன் வடக்கிருந்தானுழைச் சென்ற பிசிராந்தையாரைக் கண்டு பொத்தியார் பாடியது.
 | 
| 
 218 | 
| 
பொன்னும், துகிரும், முத்தும், மன்னிய | |
| 
மா மலை பயந்த காமரு மணியும், | |
| 
இடைபடச் சேய ஆயினும், தொடை புணர்ந்து, | |
| 
அரு விலை நன் கலம் அமைக்கும்காலை, | |
| 
5 | 
ஒரு வழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர் | 
| 
சான்றோர் பாலர் ஆப; | |
| 
சாலார் சாலார் பாலர் ஆகுபவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் பாடியது.
 |