| முகப்பு | தொடக்கம் | 
| 
மலையமான் மக்கள் | 
| 
 46 | 
| 
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் | |
| 
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை, | |
| 
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி, | |
| 
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்; | |
| 
5 | 
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த | 
| 
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி, | |
| 
விருந்தின் புன்கண் நோவுடையர்; | |
| 
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.
 |